Kanne En Karpagame |
---|
பாடலாசிரியர் : ஏ மருதகாசி
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே
கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா
இந்த சிற்பத்தை சீராட்ட வந்த செவிலித் தாயடா நான் செவிலித் தாயடா இது கற்பனையல்ல உண்மை செய்திதானடா
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே
அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா
மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா அந்தப் பசுமைப் போன்ற அன்னை ஈன்ற பதுமை நீயடா தங்கப் பதுமை நீயடா
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே
அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா
இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா இந்தக் கடமை எனது பூர்வ ஜென்மம் பாக்யம்தானடா என் பாக்யம்தானடா
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே கலி தீர வந்துதித்த பொற்பதமே
கண்ணே என் கற்பகமே கண் கண்ட அற்புதமே