Kanne Kadhavu Therandhidum |
---|
கண்ணே
கதவு திறந்திடும் முன்னே
கதைகள் படிக்கணும் பெண்ணே
தனிமைதான்இனிமைதான்
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு
கண்ணா
கதவு திறக்கட்டும் கண்ணா
மனசு நடுங்குது மன்னா
தனிமையோஇனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு
இன்பமென்னும் புத்தகம்
இங்கு எங்கு உள்ளதோ
தேடுகொஞ்சம் தேடு
காமன் சொன்ன சூத்திரம்
உன்னிடத்தில் உள்ளது
பாடுஅளவோடு
பள்ளி இது பிறர்க்கு
பள்ளியறை நமக்கு
இன்பமிது உனக்கு
துன்பமிது எனக்கு
அடி பட்டிமன்ற
வாதமிங்கு கூடாது
கண்ணா
கதவு திறக்கட்டும் கண்ணா
மனசு நடுங்குது மன்னா
தனிமைதான்இனிமைதான்
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு
உண்மையில்லை என்பதால்
ஊருலகம் நம்புமா
நாளைஅதிகாலை
உண்மையென்று சொல்லுவேன்
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்
நாளைஇந்த வேளை
தப்பு இந்த நெருக்கம்
தாங்கவில்லை எனக்கும்
காலை வரும் வரைக்கும்
காதலுக்கு வணக்கம்
அட கட்டழகன்
தொட்ட இடம் பூப்பூக்கும்
கண்ணே
கதவு திறந்திடும் முன்னே
கதைகள் படிக்கணும் பெண்ணே
தனிமைதான்இனிமைதான்
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு
கண்ணா
கதவு திறக்கட்டும் கண்ணா
மனசு நடுங்குது மன்னா
தனிமையோஇனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு