Kanne Kanne – Visithiran

Kanne Kanne – Visithiran Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

கண்ணே கண்ணே உன்னை கண்டதோர் வரமே நெஞ்சில் வைத்தே கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே

சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா

அமுத கடலில் நானே விழ இதயம் குலுங்குதே மழையும் வெயிலும் சேர்ந்தே வர உயிரும் தழும்புதே

சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா

பால் நிலவே நேரம் பார்த்து கீழ் வருமோ சாதம் ஊட்ட ஏழ் இசையும் கைகள் கோர்த்து பாடிடுமோ தூளி ஆட்ட


கடவுள் கொடுத்த புதையலே குழந்தை வடிவில் கிடைத்ததோ மனதில் விரிந்த மகிழம் பூ எதிரில் சிரித்ததோ

சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா

தேன் மழை போல் பேசும் பேச்சை நாள் முழுதும் கேட்டால் போதும் பூ விழிகள் காட்டும் காட்சி நீர் மதகை மோதும் கோலம்

அருவி வழியும் அழகு மேல் உனது சிரிப்பில் சிதறுதே சிணுங்கும் உனது குரலிலே உலகம் விடியுதே

கண்ணே கண்ணே உன்னை கண்டதோர் வரமே நெஞ்சில் வைத்தே கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே

சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா