Kanneer Thuliye |
---|
இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்
கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே
நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை
யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ
கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே கிளையை முரித்தது
கனவில் பூக்கும் பூக்களினை
கைகளில் பரித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே
மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை
யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ