Kannil Therikindra |
---|
கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
கட்டி
அணைக்கின்ற
மேனி பட்டொளி
கொள்ளாதோ
பொன்னழகு
பெண்முகத்தில் கண்
விழுந்தால் என்னாகும்
பொன்னழகு பெண்
முகத்தில் கண்விழுந்தால்
என்னாகும் பொன்னாகும்
பூவாகும் தள்ளாடும்
செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்
சிவந்த மலர்கள்
சிரிக்கும் அழகு நினைவில்
எத்தனை சிந்தும்
கொடுக்கும்
கரங்கள் துடிக்க துடிக்க
எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில்
அள்ளலாம் கதை சொல்லலாம்
வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு
சொல்லிவிடு சொல்லிவிடு
செங்கனி
மங்கையர் மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர்
மீது செவ்வரி வண்டாடும்
அருவி விழுந்து
நதியில் நடந்து கடலில்
கலந்ததென்ன
பருவம் மலர்ந்து
மடியில் விழுந்து பழகும்
கதையை சொல்ல
நதி வந்தது
கடல் கொண்டது
சுவை கண்டது
என்ன சொந்தம் இது
கொஞ்ச வரும்
வஞ்சியரின் நெஞ்சமிது
ஆட வந்தேன்
மேடையிலே ஆடி
விட்டேன் உன்மனதில்
ஆடுவதை காண
வந்தேன் ஆடவைத்தேன்
உன்மனதை
ஆண் & கண்ணில்
தெரிகின்ற வானம்
கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற
மேகம் தொட்டு
தழுவாதோ
ஆண் & கட்டி
அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி
பட்டொளி கொள்ளாதோ