Kannilladha Paravai

Kannilladha Paravai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

கடவுளுக்கே கண்ணில்லையோ
அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ
இங்கே கண்ணில்லா மனிதர்களை
அந்த கடவுள்தான் படைத்தாரா

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது
ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது
கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

முல்லைக்கொடி அலையுதென்று
தேரைத் தந்தான் பாரி
ஒரு புள்ளிமயில் குளிரில் வாட
போர்வை தந்தான் பேகன்

நீங்கள் கூட வள்ளல்தானே
என்ன செய்ய வேண்டும்
இங்கே இருளில் வாழும் மக்களுக்கு
ஒளியை வழங்க வேண்டும்
கண் ஒளியை வழங்க வேண்டும்ஆஆஆஆ

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது
ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது


கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது

விழி ஒருவருக்கில்லை என்ற
பழியை முதலில் துடைப்போம்
புது விஞ்ஞான கூடம் ஒன்று
விண்வெளியில் அமைப்போம்

எல்லோரும் பார்வை பெற்று
இன்பக் கடலில் குளிப்போம்
இங்கே குருடர் யாருமில்லை என்று
புதிய உலகம் படைப்போம்
புரட்சி வழியில் நடப்போம்ஆஆஆ

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது
வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது
ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது

கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது
எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது