Kannillaiyo Manamillaiyo

Kannillaiyo Manamillaiyo Song Lyrics In English


யாருக்கு தீங்கு செய்தேன்
யார் குடியை கெடுத்தேன்
யார் பொருளை அபகரித்தேன்
சீரோடு வாழ்ந்த என்னை
வேரோடு அழித்தது ஏன்
தெய்வமே இது நீதியோ

கண்ணில்லையோ மனமில்லையோ
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

கண்ணில்லையோ மனமில்லையோ
இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ

எண்ணமும் கனவாகி
இடி மின்னல் மழையாகி
கண்களும் கண்ணீர்க் கடலானதே
மங்கல வாழ்வும் பறிபோனதே
துயர் சூழ்ந்த
என் வாழ்வில் புயல் வீசலாமோ
உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ

கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ


என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
என்னைப் படைத்ததும் ஏன்
இன்பம் கொடுத்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்
இது போல பாதியிலே
தட்டிப் பறித்ததும் ஏன்

அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
அன்பை வளர்த்ததும்
ஆசையை தந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
துன்பமெனும் நெருப்பாற்றில்
எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்
கண்ணில்லையோ மனமில்லையோ
கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ

செய்த பிழை என்ன
தேகம் இருந்தென்ன
உய்யும் வழி என்ன
உனது தீர்ப்பென்ன