Kannirandum Thevaiyillai Kaanbadharkku

Kannirandum Thevaiyillai Kaanbadharkku Song Lyrics In English


கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா

சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு


நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு

அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா

அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு