Kannodu Kannum Kaiyodu Kaiyum |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் : வாலி
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
காவேரி நீரோட்டமோ உள்ளம் ஊர் தாண்டி ஊர் போகும் தேரோட்டமோ கஸ்தூரி மானாட்டமோ துள்ளும் கால் ரெண்டும் கடல் கொண்ட மீனாட்டமோ
கட்டுக்காவல்கள் காணாத கொண்டாட்டமோ பொங்கும் ஆனந்தம் தேனாட்டமோ அன்பின் ரீங்காரம் நீங்காத சங்கீதமோ இன்பம் நாள்தோறும் நாள்தோறும் மேலும் மேலும் கூடும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
காலங்கள் பொன்னானது வர்ணஜாலங்கள் கோலங்கள் உண்டானது பூவாகி காயானது நல்ல பொழுதாக பொழுதாக கனியானது
யாரும் ஏட்டோடும் பாட்டோடும் எழுதாதது இந்த சந்தோஷம் புதிதானது சொந்தம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பிரியாதது பந்தம் போகாது போகாது வானம் போலே வாழும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
இருவர் : லால் லால லால் லால லாலா லால் லால லால் லால லாலா