Kannodu Vin Pesum Jaadai

Kannodu Vin Pesum Jaadai Song Lyrics In English


ஜி கே வெங்கடேஷ் மற்றும் ஏ எல் ராகவன்

கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை

கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ

மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்

ஒரே ஆசையில் சதா ஆடலாம்
ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
நாடகம் ஆடிடும் நாளெல்லாம்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் மனம் மனம்

மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்

ஒரே ஆசையில் சதா ஆடலாம்
ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
நாடகம் ஆடிடும் நாளெல்லாம்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் மனம் மனம்ஹோ ஓ

பெற்றோரே செல்வங்கள் பெற்றார்
ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார்
பெற்றோரே செல்வங்கள் பெற்றார்
ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார்
கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள்
ஐயா உனைக்கண்டு பெற்றார்
கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள்
ஐயா உனைக்கண்டு பெற்றார்


கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ

இருவர் : இங்கு வந்தவர் ஏழையாயினும்
செல்வராயினும் ஒன்றே
அஹாஹாஆஹாஹாஆஅ
ஹாஹாஹாஹாஅஹா
பங்கு கொண்ட பின் மனிதர் யாவரும்
கவிஞர் ஆவதும் இங்கே
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

துன்பம் என்பதே இல்லை
இருவர் : இனி துன்பம் என்பதே இல்லை
அது ஏது இது மதனம் மாறி

இருவர் : மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் மனம் மனம்ஹோ ஓ

கொண்டாரைத்தான் நம்பி வந்தேன்
அவர் குடியோடு உறவாகிக் கொண்டார்
அன்றாடம் என் நெஞ்சைத்
துன்பங்கள் கொன்றாலும்
ஐயா உனை எண்ணி வாழ்வேன்

கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை

கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ