Kannumani Kannumani |
---|
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்
மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
கண்ணுமணி கண்ணுமணி
உன்ன தொட்ட கைகள் வந்து
என்ன தொடுது அம்மா
கட்டிப் புடிச்சு பாட்டும் பாடி
முத்தம் கொடுக்குதாம்மா
நேரம் காலம் கூடிப் போச்சு
கட்டுப்படுத்த வழி ஏது
நாளை மறந்து காலை வரைக்கும்
ஊறும் சுகமும் குறையாது
தாலாட்டு நான் பாட
நாள் கொஞ்சம் ஆகும்
எம் பாட்ட நீ கேட்டு
வாடாதே ஓடாதே
வேறெங்கும் தேடாதே
வேண்டாங்கண்ணு
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்
மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
கெட்டி மேளம் கேட்டதும் இல்ல
தாலி கட்டவில்ல
அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க
அனுபவமும் இல்ல
தானா கனிஞ்ச காதல் பரிசு
கையில் விழுந்து சேர்ந்தாச்சு
வீணா கவலை ஏன்டி ஒனக்கு
எல்லா கதையும் முடிஞ்சாச்சு
நீ வாங்கு சன்னியாசம்
சம்சாரம் நான்தான்
பூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி
விதையாகி மரமாகி வாழ்ந்தாச்சம்மா
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்
மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா
கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
ஹ ஹா ஹா ஹா
கண்ணுமணி கண்ணுமணி