Kanpadume

Kanpadume Song Lyrics In English


கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா

புண்படுமே
புண்படுமே புன்னகை
செய்யலாமா பூமியிலே
தேவியைப் போல் ஊர்வலம்
வரலாமா

கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா

ஆடவர் எதிரே
செல்லாதே அம்பெனும்
விழியால் கொல்லாதே

காரிருள் போலும்
கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை
மூடு தமிழ்க் காவியம்
காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு


கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா

கண்ணாடி
முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும்
உன்னைக் காணாதே

மங்கை உன்
அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச
நேரம் இந்த மானிடர்
உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா