Kanpadume |
---|
கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா
புண்படுமே
புண்படுமே புன்னகை
செய்யலாமா பூமியிலே
தேவியைப் போல் ஊர்வலம்
வரலாமா
கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா
ஆடவர் எதிரே
செல்லாதே அம்பெனும்
விழியால் கொல்லாதே
காரிருள் போலும்
கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை
மூடு தமிழ்க் காவியம்
காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு
கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா
கண்ணாடி
முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும்
உன்னைக் காணாதே
மங்கை உன்
அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச
நேரம் இந்த மானிடர்
உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்
கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா