Karpa Adhu Karuppa Sivappa |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா
கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி
அது மனதில் உள்ளது கண்மணியேஓஓ அது மனதில் உள்ளது கண்மணியே நான் அப்படி பார்த்தால் பத்தினியே
கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா
வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு பல துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு என் கதையைக் கேட்டு அழுததுண்டு சில கடனும் சொல்லி போனதுண்டு
விளக்கை அணைத்தால் சித்தினி நான் அடி விடிந்து விட்டால் பத்தினி நான் கண்களில் ரத்தம் வந்து காயங்கள் இங்கே இடி தாங்கும் பூக்கள் இங்கே வாழ்வது எங்கே
கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா
கண்ணகியை அன்று அழ வைத்தார் அடி அதற்கு பிறகே சிலை வைத்தார் பகலில் பெண்ணை தொழ வைத்தார் அடி இரவில் அதற்கோர் விலை வைத்தார்
பெண்கள் மீதுதான் தப்பிருக்கு அடி ஆண்களுக்கெங்கே கற்பிருக்கு பெண் குலம் மட்டும் கற்பை காக்கட்டும் இங்கே வரச் சொல்லு பெண்ணே அந்த வள்ளுவன் எங்கே
கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா
கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி கற்பு என்பது உள்ளபடி நம் கர்ப்பப்பையில் இல்லையடி
அது மனதில் உள்ளது கண்மணியேஓஓ அது மனதில் உள்ளது கண்மணியே நான் அப்படி பார்த்தால் பத்தினியே
கற்பா அது கருப்பா சிவப்பா பெண்ணே அது உனக்கா எனக்கா