Karuvella Kaatukkulae

Karuvella Kaatukkulae Song Lyrics In English


கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது



கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது



முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது

கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது

முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன
பொரசலின்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது

ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்

ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே

நாம கூது காய்ஞ்சதுண்டா
என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது

கோடை மழை புடிச்சாலும்
அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட
பொட்ட கூடுமா

இது பொம்பளைக்கு
புரியலைன்னு பொரனி பேசுது
குருவி பொரனி பேசுது

ஆ சோடியோடு பாடி ஆட
ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட
குருவியின்னு சாடை பேசுது

கூடு யாரு கூடு என்றும்
சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று
குருவி பேசுது


கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது



சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள
முத்தம் தருமேஏஏய்

சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள முத்தம் தருமே

நாம முத்தம் தந்ததுண்டா
என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது

முத்து சோளம் திங்கையிலே
அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு
தொண்ட விக்குமே ஹ

இதை பொட்டச்சிக்கு சொல்ல
சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது

அஹாஅத்து வன காட்டுக்குள்ள
ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு
லொள்ளு பேசுது

காடு வெட்டும் சாக்க வச்சு
கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு
பதறி பேசுது

கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது

முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனிபேசுது

கருவேலங் காட்டுக்குள்ள
ஏ ஏஏய்ஏய்