Karuvile Uruvaana

Karuvile Uruvaana Song Lyrics In English


வறுமைப் புயலாலே
துயரக்கடல் மேவும்
வாழ்க்கைப்படகு கவிழும்
ஆனால் மறுமையிலும் இம்மையிலும்
மங்காத ஜோதியாய்
மனிதா உன்புகழ் உலாவும்

கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

பிறவியின் பயன் இங்கு மனிதா
உடன் பிறந்தார்க்கு நீ செய்யும்
சேவைதான் புனிதா
தெருவிலே அலைந்தாலும் தீமையே
விளைந்தாலும்
பெருமையை இழந்தாலும்
கடமையை மறவாதே


கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

கடலினும் ஆழ்ந்தது நேசம்
கஷ்டம் வந்தாலும்
மாறாதடா ரத்தபாசம்
கடலினும் ஆழ்ந்தது நேசம்
கஷ்டம் வந்தாலும்
மாறாதடா ரத்தபாசம்

கொடுமையின் குகையடா உலகம்
மனங் குமுறாதே மனிதா
கொடுமையின் குகையடா உலகம்
மனங் குமுறாதே மனிதா
உன்புகழ் என்றும் நிலவும்
உன்புகழ் என்றும் நிலவும்
மனங் குமுறாதே மனிதாஆஅ