Kathiravanai Paarthu

Kathiravanai Paarthu Song Lyrics In English


கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்ஆஆ

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பூபாள ராகம் ஆஆ
பூ பாடும் நேரம் ஆஆஆ
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது


பச்சை வண்ண சேலை ஆஆ
கட்டிகொண்ட பூமி ஆஆஆ
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது