Kathirunthen Kanava

Kathirunthen Kanava Song Lyrics In English


காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

சீதை மீது பழி
வரும்போது தசரத
ராமனும் தீ வளர்த்தேன்

பேதை மீது பழி
வந்த போது நான் கண்ட
ராமனும் பூ வளர்த்தான்

இவளின் நெஞ்சம்
மாறுமா நெருப்பில் தூசி
சேருமா இவள் நெஞ்சில்
ஒரு பாரம் கண்ணீரே
பரிகாரம் அழகே

காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

தர்மத்தின் எல்லை
தாண்டவும் இல்லை தாலிக்கு
இங்கொரு தோல்வி இல்லை


கொண்டவன்
என்னை கும்பிடும் போது
சாமிக்கும் என்னிடம்
கேள்வி இல்லை

கணவன் எந்தன்
வேலியே இனிமேல்
இல்லை கேலியே

மறு ஜென்மம்
வரும் போதும் துணை
வந்தால் அது போதும்
துணை வா

காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா