Katrinile Varum Geetham

Katrinile Varum Geetham Song Lyrics In English


ஆஆஆஅஆஆஆஅ
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்

மீராவின் சங்கீதம் மன்றத்தில் இந்நேரம்
இனிமையை பொழிந்திட
வாரானோ கோபாலன் நான் தேடும் பூபாலன்
இதயம் குளிர்ந்திட

காலம்தோறும் காதல் கீதம்
ஏதேதோ நான் பாட
மேல் விழிகளும் ஏன் சிவந்தது
பூ உதடுகள் ஏன் வெடித்தது

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்

பூவை என் நெஞ்சம்தான்
பூவைப் போல் மஞ்சம்தான்
தலைவனை அழைத்தது
ஏகாந்த நேரத்தில்
ஏன் இந்த கோலத்தில்
தணலென கொதித்தது


கண்ணன் என்னும் மன்னன் செய்த
மாயம் தான் ஜாலம் தான்
நீ நிலமென நான் குளித்திட
நூல் இடையென நான் தளர்ந்திட

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்ம்ம்ம்

காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
நேற்றிரவு கேட்டேனே
பால் நிலவாய் காய்ந்தேனே