Katti Karumbe Kanna

Katti Karumbe Kanna Song Lyrics In English


ஆரி ஆராரிரோ
ஆரி ஆராரிரோ ஆரி
ஆராரிரோ

கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை

ஒப்புக்கு சொன்னேன்
ஆராரோ ஊமைக்கு சொந்தம்
யார் யாரோ பூ வைத்த நெஞ்சில்
தீ வைத்ததாரோ உண்மையை
சொல்ல வாராரோ

காளைக்கு தானே
வீராப்பு கன்றுக்கு ஏனோ
பொல்லாப்பு கன்றோடு
பசு இன்று திண்டாடுது

கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய்
இல்லை


சிப்பிக்குள் முத்து
வந்தாலும் அது சிப்பிக்கு
சொந்தம் ஆகாது நதியோடு
போனால் கரை உண்டு
கண்ணே விதியோடு
போனால் கரை ஏது

கண்ணுக்குள்
வெல்லம் இப்போது நாம்
கரை சேரும் காலம்
எப்போது உன் தாய்
பாலில் கண்ணீரை
யார் சேர்த்தது

கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய்
இல்லை

ஆரிரா ராரோ
ஆர்ராரோ ஆரிரா ராரோ
ஆர்ராரோ