Katti Vacha Poovum |
---|
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது
அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது
மன்னர் வரக் காத்திருந்தேன்
இன்னல் வந்தது அவர் இல்லை என்றது
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது
என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது
கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது
தெய்வம் ஓடி விட்டது
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே