Kaveri Aaru

Kaveri Aaru Song Lyrics In English


லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
மஞ்சள் மணம் மணக்க
மாலை ரெண்டு தொடுக்க
நாளும் பாத்தாச்சு

நம்ம சாமி கண்ணு தொறக்க
தாரம் ஒன்ன புடிக்க
வேளை சேர்ந்தாச்சு

இனி ஆறாத மாறத
சந்தோஷம்தான்
இனி எந்நாளும் எந்நாளும்
கொண்டாட்டம்தான்
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நான் சூடும் வைரம்
அது நீதானே கண்ணா
தேன் போல பால் போல
என் வாழ்வுதான்

ஏரோடு வாழும்
என் வாழ்வில் இன்று
ஒரு தேர் போல
பெண் வந்தாள் என் வீதிதான்

அன்பாலே கட்டுப்பட்டு
அழகாக தொட்டுக்கிட்டு
எந்நாளும் நான் வாழ்வேன்
உன்னோடுதான்

அடி கூரை வீட்டுக்
கூரச் சேல வாங்கி வரவா
அதை மாடியில
வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா
ஓஹோ ஹோ
ஓஹோ


காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

தானானா தனனான தானானா
தானானா தனனான தானானா
இருவர் : தானானா தனனான
தந்தன தந்தனனா

தெம்மாங்குப் பாட்டு
அதைச் சீரோட கேளு
அன்போட என் தாரம் இப்போதுதான்
நீ உள்ள போது
இனி வேறென்ன வேணும்
நெஞ்சோடு நான் வாழ்வேன்
எப்போதும்தான்

கண்ணாடி வீட்டுக்குள்ள
பொன்னோடு வாழும் புள்ள
என் வீட்டு சோளச்
சோறு இனிக்காதம்மா

நீ கையத் தொட்டு
அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா
இது கற்பனையில்
வாழுகிற உள்ளம் அல்லவா
ஓஹோ ஹோஹோ

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம்
கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஓஓஒஒ