Kavidhaigal Viriyum |
---|
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
இளமைகள் மலரும் வழியிலே
மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
வெள்ளித் தேரில் வரும் நீ
முல்லைப் பூவின் சரம் நான்
அள்ளிக் கொள்ள சுகம்
ஒர் ஆரம்பம் ஆகாதோ
மாமன் வீட்டு மகள் நீ
எந்தன் தோட்ட மலர் நான்
உன்னை மீட்டும் வரை
என் ஆசைகள் நூறாகும்
வானம் பூத்தூவி
வாழ்த்தும் நேரம்
காதல் உள்ளம் பாடல் பாடாதோ
முகவரி தரும் வரை
சுகவரி வேண்டுமா
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
இளமைகள் மலரும் வழியிலே
மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
கைகள் தொட்ட இடம்
பூந்தென்றல் தொட்ட சுகம்
உன் பார்வை பட்டால் சுடும்
மேலாடைகள் தாங்காது
நெஞ்சில் மஞ்சம் தரும்
நான் உந்தன் வஞ்சிக் கொடி
நீ கொஞ்சம் காலம் பொறு
உன் தேவைகள் ஈடேறும்
அந்தி இரவோடு
கொஞ்சும் வேளை
கண்டு நின்றால்
மோகம் கூடாதோ
புதுமைகள் பழகிடும்
ரதி மதன் இலவள் நான்
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
இளமைகள் மலரும் வழியிலே
தோளிலேபூங்கொடி
பூவிடும் நாளே பொன்னாளாம்
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள்
புரியும் மொழியிலே