Kazhani Engum Kathiradum |
---|
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவாநீ வா
கலையான நிலை காணவா
கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
ஆஅஆஅஆஅஆ
அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
கலப்பை தனை மறந்து உழவன்
கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே
ஆஅஆஅஆஅஆ
அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவாநீ வா
ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்
ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்
அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே
ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே
நாம் அறிந்திடலாமே
எந்தன் மயிலே
மழை முகிலே
இளங்குயிலே
அதன் குரலே
இருவர் : எழில் குலுங்கும்
உலகை உணர்ந்திடுவோம்
கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணுவோம்
நாமும் கலையான நிலை காணுவோம்