Kealai Magane

Kealai Magane Song Lyrics In English


கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

பாவத்தைக் கண்டால் விலகிவிடு
பாதையைப் பார்த்து நடந்து விடு
பாவத்தைக் கண்டால் விலகிவிடு
பாதையைப் பார்த்து நடந்து விடு
ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு
அழுவதை மட்டும் மறந்து விடு

ஆரத்தி விளக்கும்
நாதத்தின் ஒலியும்
ஆலயமணியும் நீயேநீயே

கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையைக் கண்டால் புலியாக
கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையைக் கண்டால் புலியாக
குறி வைத்து பார்ப்பதில் கொக்காக
குணத்தில் யானையின் வடிவாக

ஆடிடும் மானும்
ஆனந்த மயிலும்
பேசிடும் கிளியும் நீயேநீயே


கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
அன்னை இருப்பது தனியிடமே
ஆயினும் அவள் மனம் உன்னிடமே

கோடை நிழலும்
வாடை கனலும்
கோபுர விளக்கும் நீயேநீயே

கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே