Kekkaliyo Kekkaliyo |
---|
பெண் ஹோ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே
பெண் கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது
ஆண் மற்றும்
கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
பெண் என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது
யமுனைக் கரையில் வந்து வந்து மோதும்
அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும்
அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே
நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே
வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும்
நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்
உன்னைப் பார்க்காது கரம் சேர்க்காது
தவிக்கும் தவிப்பை
யாரைக் கண்டு நானும் சொல்வேன்
கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது
பெண் ஓ ஆஆஆ
ஆஆஆஆஆ
முள்ளிலே முத்தை இட்டு
தூங்கும் படி சொன்னாய்
எவரால் முடியும் நீ சொல்லு கண்ணா
கண்ணனின் கண்கள் விடும்
பாணம் ஒரு போதும்
காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது
கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில்
கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் சேலை
மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும்
அனல் போல் கொதிக்கும்
ஆசை கொண்ட தேகம் ரெண்டும்
பெண் கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது
கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்