Keli Migacheivaal

Keli Migacheivaal Song Lyrics In English


கேலிமிகச் செய்வாள்
கேட்டதெல்லாந் தான் தருவாள்
கேலிமிகச் செய்வாள்
கேட்டதெல்லாந்தான் தருவாள்
வேலைகளைச் செய்து கொண்டே
வேடிக்கை காட்டிடுவாள்
வேலைகளைச் செய்து கொண்டே
வேடிக்கை காட்டிடுவாள்
ஏனடி நீ நேற்றிரவு ஏன்
கோபம் கொண்டா யென்றால்
ஏரியிலே மீன் பிடித்தேன்
பல் நோவு வந்ததென்பாள்

வீட்டிலே என்றைக்கும்
ஓயாமல் உழைத்திடுவாள்
வீட்டிலே என்றைக்கும்
ஓயாமல் உழைத்திடுவாள்
பாட்டிலே உள்ள மெல்லாம்
பறிகொடுத்தேன் பாருமென்பாள்
பாட்டிலே உள்ள மெல்லாம்
பறிகொடுத்தேன் பாருமென்பாள்

கிட்டத்தில் வந்து நின்று
ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள்
கிட்டத்தில் வந்து நின்று
ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள்
கிட்டி அணைந்திடிலோ
எட்டி நின்று பேசு மென்பாள்
கிட்டி அணைந்திடிலோ
எட்டி நின்று பேசு மென்பாள்

மாதவளால் கண்டசுகம்
மிக உண்டு கண்டீர்
மாதவளால் கண்டசுகம்
மிக உண்டு கண்டீர்
மாதர்களில்லாமலிந்த
மானிலத்தில் வாழ்வுமில்லை
மாதர்களில்லாமலிந்த
மானிலத்தில் வாழ்வுமில்லை

முன் வினையால் நானும்
மனமுடைந்து வாடுகையில்
முன் வினையால் நானும்
மனமுடைந்து வாடுகையில்
மாதவளைக் கண்டேன்
மாலதி நான் என்றாள்
மாதவளைக் கண்டேன்
மாலதி நான் என்றாள்

கட்டழகு உள்ள உடல்
கண்ணிலே நல்ல குணம்ம்ம்ம்ம்ம்ம்
காணக் கண் கூசும் கரும் குழலாள்
ஒப்புயர்வற்ற ஒய்யார நடையுடனேஏஏ
எனைக்கண்டு காரணமுங் கேட்டு
ஊரும் பேரும் ஒளியாமள் கூறுமென்றாள்

பசியாறச் சோறில்லை
படுத்துறங்க வீடில்லைஈஈ
நசித்திடிந்த சத்திரத்தில்
நான் போய் படுத்திருந்தேன்
நடு நிசியில் பேய்க் கூட்டம்
வரக்கண்டு பயந்துஈஈ
ஓடினேன் ஓடி ஒளிந்தேன்
அம்மம்மா உனை நான் கண்டேன்
நான் உனைக் கண்டேன்


தாலி கட்டும் பெண்டாட்டி
தங்கு தடை ஏதுமில்லை
தாலி கட்டும் பெண்டாட்டி
தங்கு தடை ஏதுமில்லை
நானோர் அனாதை நாதி
ஏது மில்லாதவன்
நானோர் அனாதை நாதி
ஏது மில்லாதவன்
ஆன துயருக் களவில்லை
ஆன துயருக் களவில்லை
ஆதரித்தால் போது மென்றேன்

அன்றுமுதல் நாங்கள்
அன்பாலிணைந்து விட்டோம்
நகரத்து வீதிகளில் ககனத்துக்
கன்னிகை போல்
அவள் ஆடுவாள்

நான் பாடுவேன் அம்பிகை முன்
நான் பல ஆணைகள் இட்டபின்னர்
நம்பிக்கை கொண்டாள் அந்த
நாயகியை நான் மணந்தேன்

அவள் காணக் கிடைக்காத தங்கம்
அவள் காணக் கிடைக்காத தங்கம்
மாதவளை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
மாதவளை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
காணக் கிடைக்காத தங்கம்

இன்பமுடன் வாழ்க்கையிலே
இளவரசிதனைக் கண்டு
என் மணம் பறிகொடுத்தேன்
இன்னல்கள் பல நேருமென்று
இயம்பினாள் நீதி பல சொன்னாள்
நியாயம் கேட்டாள்
அழுதாள் புலம்பினாள்
அடித்துத் துரத்திவிட்டேன்
என்னிரு கண்ணின் மணியாய்
உதித்த மாமணியே
மணியே என் அன்பே அமுதே
என் ஆசைப் பொக்கிஷமே
பண்பே பாரினில் பத்தினி ரத்தினமே
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்