Kelvi Piranthathu |
---|
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர்
கீழோர் என்பது மாறாதோ
ஆண்டான் அடிமை மேலோர்
கீழோர் என்பது மாறாதோ
அரசன் இல்லாமல் ஜனங்கள்
ஆளும் காலமும் வாராதோ
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
வானத்தில் ஏறி சந்திரமண்டல
வாசலைத் தொடலாமா
வானத்தில் ஏறி சந்திரமண்டல
வாசலைத் தொடலாமா
மாண்டு கிடக்கும் மனிதனின்
மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே
வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில்
பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும்
நமது வீட்டின் தனி உடைமை
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று