Ketka Villaiya

Ketka Villaiya Song Lyrics In English


கேட்கவில்லையா

நெஞ்சின் ஓசைகள்

கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
ஊமையானதா உந்தன் ஆசைகள்
நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்
தாளம் போடும் நாளம் மேனியில்
சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே
உன்னை ஏன் ஒளிக்கிறாய் வெளியில் வா
இந்த நாள் நல்ல நாள் முடிவை தா

கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

மூச்சுக் காற்றிலே
வெப்பம் வந்தும் புரியவில்லையா
மூடும் இமைகளில்
உண்மை உனக்கு விளங்கவில்லையா
தாகம் உண்டானதே
உன் மோக முகம் காட்டுமே
வேகம் ஏன் வந்தது
உன் பெண்மை பதில் சொல்லுமே
ஓடும் நதியில் தானே
சலனம் இருக்கும் நீ வா வா
வானம் பூமி சாட்சியாக வாழலாம் வா

கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்

கண்ணை மூடினால்
கோடி வண்ணம் கடந்து போகுதே
விண்ணிலே மனம்
சிறகு முளைத்து பறந்து போகுதே
என்ன மாற்றம் இது எனக்குள் பூப்பூக்குது
காட்டுப் பாதை இதில் அருவி தேனூற்றுது
மண்ணில் இருக்கும் போது
புதையல் கூட வீண் தானே
என்னைத் தோண்டி புரிய வைத்தாய்
வாழலாம் வா

கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்


ஊமையில்லையே எந்தன் ஆசைகள்

நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்

தாளம் போடும் நாளம் மேனியில்

சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே

கனவுகள் கலைந்ததே கண்ணிலே
என்னை நீ காணலாம் உன்னிலே

கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்