Kettu Pattanam

Kettu Pattanam Song Lyrics In English


கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்

என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா

கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

தவறு நெருங்காமல்
தடமும் புரளாமல்
நெருப்பாய் நான் இருந்தேன்
தரும நெறி காக்கும்
மனிதர் பல பேர்க்கு
செருப்பாய் நான் இருந்தேன்

கடமை நடை போடும்
காவல் துறையோடு
துருப்பாய் நான் இருந்தேன்
களவு புரிவோரை
உளவு பார்க்கின்ற
பொறுப்பாய் நான் இருந்தேன்

நல்லது நடக்கலே பொதுவாக
நிம்மதி கலைந்தது மெதுவாக
இங்கொரு குடும்பமே பலியாக
என் மனம் எனக்குத் தான் பகையாக

போயாச்சு என் தூக்கங்கள்
வேராச்சு என் நோக்கங்கள்
என் கதை அம்மம்மம்மா
உன் கிட்டச் சொல்லட்டுமா

கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்


நியாயம் அழிந்தாலும்
நீதி இறந்தாலும்
நமக்கேன் என்றிருந்தேன்
நாட்டை எவனாலும்
திருத்த முடியாது
என நான் தெரிந்து கொண்டேன்

விழிகள் இமை மூடி
விளைந்த பல கோடி
கனவில் வாழ்ந்திருந்தேன்
நேற்று நிலை வேறு
இன்று நிலை வேறு
அடி நான் கண்டு கொண்டேன்

எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு
இப்படித் தானம்மா நாள் போச்சு
அப்படி சூழ்நிலை உருவாச்சு
நான் அதன் கைகளில் விழுந்தாச்சு

வாழ்க்கைதான்
முன் போல் இல்லை
குற்றம்தான் என் மேல் இல்லை

என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லணுமா

கெட்டும் பட்டணம் போய்
கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்
காவேரி வாசம் விட்டு
கூவத்தின் வாசம் கண்டேன்

என் கதை அம்மம்மம்மா
இன்னமும் சொல்லனுமா

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்

கெட்டும் பட்டணம்
போய்ச் சேரென்று
சொன்னவன் நல்லவனா
நான் அறியேன்