Kizhakku Veluthathadi |
---|
கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததடி
கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
ஓடிய மேகம் இன்று
மழையாகப் பொழிந்ததடி
ஊரார்க்கு கிடைக்கும் என்று
ஊரணியில் விழுந்ததடி
காடு சென்ற மாடப் புறா
வீடு வந்து சேர்ந்ததடி
வீடு வந்த மகிழ்ச்சியிலே
விழாக் கோலம் கொண்டதடி
கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
வானமே வையமே
நீ தந்த வளமெல்லாம்
மானிடர் உரிமையம்மா
நான் என்று சொல்வதை
நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழுமம்மா
பொழுதெல்லாம் உழைக்கின்ற
ஏழையின் முகத்திலே
புன்னகை வளருமம்மா
புன்னகை வளருமம்மா
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததம்மா
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததம்மா
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா ஆ ஹோய்
நல்லவர்க்கு நல்லதெல்லாம்
நடப்பதுதான் நீதியடி
இல்லாமல் மாறி விட்டால்
எந்த உயிர் வாழுமடி
பல்லாண்டு பாடுங்கடி
பறவைகள் போல் ஆடுங்கடி
பதினாறு பெரு வாழ்வும்
வருகவென்றே கூறுங்கடி
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா