Koduthathellam Koduthaan

Koduthathellam Koduthaan Song Lyrics In English


கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை
வாசலென்றால் தென்றல்
வர வெறுத்திடுமா

மாலை நிலா
ஏழையென்றால்
வெளிச்சம் தர
மறுத்திடுமா

உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

படைத்தவன்
மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவம் இல்லை

கிடைத்தவர்கள்
பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில்
நின்றார்


பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

இல்லை என்போர்
இருக்கையிலே இருப்பவர்கள்
இல்லை என்பார்
மடி நிறைய பொருள்
இருக்கும் மனம் நிறைய
இருள் இருக்கும்

எதுவந்த
போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்