Kollaiyittavan Neethan

Kollaiyittavan Neethan Song Lyrics In English


கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
நீ ஆணை இட்டு சொல்

கொள்ளை இட்டவன் நீதான்

என் உள்ளத்தை

கொட்டி வைத்தவன் நீதான்

நல் இன்பத்தை

கன்னம் இட்டவன் நீதான்

என் கன்னத்தில்
கண்டு கொண்டவள் நான்தான்
உன் எண்ணத்தை

கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும்
காட்டும் பாவனை என்ன
கள்வன் என்பதை கண்கள் சொன்னபின்
போடும் வேஷமும் என்ன

பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
இயேசு தன்னையோ கள்வன் என்றுதான்
சொல்லி வைத்தனர் அன்று
ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ
உண்மை சொல்வது இன்று


கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

உண்மை என்பது என்றும் ஊமையாய்
வாழ்ந்திருப்பதும் இல்லை
ஊழல் மன்னரை சட்டம் என்றுமே
விட்டு வைத்ததும் இல்லை

உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
குற்றவாளியே இன்று நாட்டிலே
சட்டம் செய்திடும்போது
சட்டம் என்பது குற்றவாளியை
கண்டு கொள்வது ஏது

கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
என்று எண்ணியே வந்தவர் கதை
என்ன ஆனதோ பாவம்

நாளை யாவையும் மாறும்

நல்லதோர் பதில் கூறும்

அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்

இருவர் : எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்