Kolli Malai Saralamma

Kolli Malai Saralamma Song Lyrics In English


கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா மங்கலமாய் அங்கு ஒரு மானிருந்தது அந்த மானோடு ஆண் மானும் வாழ்ந்திருந்தது

சின்ன சின்ன குட்டி ரெண்டு சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு

சின்ன சின்ன குட்டி ரெண்டு சிரிக்கும் தங்கப் பெட்டி ரெண்டு சேர்ந்திருந்த மான்களுக்கு பிறந்து வந்தது அந்த ஜீவனோடு பாசமென்னும் விருந்து வந்தது

கொல்லிமலை சாரலம்மா குளிரடிக்கும் பூமியம்மா

ஊரில் ஒரு வேடனம்மா உயிர் பறிக்கும் பாவியம்மா


ஊரில் ஒரு வேடனம்மா உயிர் பறிக்கும் பாவியம்மா ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது ஓரளவும் இல்லையம்மா கருணை என்பது அவன் உள்ளத்திலே பிறந்ததுதான் கொடுமையென்பது

காட்டு வேடன் துடித்து வந்தான் வேட்டையாடி முடிக்க வந்தான் கண்டு கொண்ட ஆண் மானோ கோபம் கொண்டது அந்த களத்தினிலே ஆண் மானின் உயிர் பிரிந்தது

மணமுடித்த கணவனுக்கு மாலையீடு கட்டி வைத்து தினமும் அதை பெண் மானே தொழுது வந்தது தன் சின்ன சின்ன குட்டிகளை தொழவும் சொன்னது

புரிந்தவரை புரியுமென்று முடிந்தவரை சொல்லிவிட்டேன் இருந்த கதை இவ்வளவே என்னிடத்திலே இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே இனி எதிர்காலம் யாவையுமே உன்னிடத்திலே