Kondaadum Manasu |
---|
இசை அமைப்பாளர் : என் ஆர் ரகுநந்தன்
கூழாங்கல்லு கண்ணால் இவன்
சுண்டி இழுப்பான்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன்
பேசி சிரிப்பான்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி
கொண்டாடும் மனசு
விளையாடும் வயசு
அணை போட்டா அடங்காது
தினந்தோறும் வெரசா
பொறப்போமே புதுசா
எப்போதும் திருநாளு
நெஞ்சில் தெம்பு இல்லாம போனா
வாழ்க்கை பசிக்காது
வம்பு தும்பு இல்லாம இருந்தா
இளமை ருசிக்காது சொன்னா கேளு
கூழாங்கல்லு கண்ணால் இவன்
சுண்டி இழுப்பான்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன்
பேசி சிரிப்பான்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி
கொண்டாடும் மனசு
விளையாடும் வயசு
அணை போட்டா அடங்காது
தினந்தோறும் வெரசா
பொறப்போமே புதுசா
எப்போதும் திருநாளு
வாழ்வது ஒரு வாட்டி
வாழணும் கூறாக
இல்ல அது போகும் தரிசு
மண்ணு நீராக
நெனச்சதையும் நடத்தணும்
நடப்பதையும் ரசிக்கணும்
சோக சுகத்தை வாழ்ந்து பார்க்கணும்
போக்கிலே தெச மாறிப்
போகிற போது
ஆத்துல இலையாட்டும்
ஆகுவ பாரு
குண்டு குழியும் வாழ்க்கையில்
முண்டு முடிச்சு போடுவேன்
கண்டு புடிச்சி அவுத்திட்டு
கரையேறப் பாரு
வரையறை இல்லாம வாழ்ந்தா கூட
வரைமுறை தாண்டக் கூடாது
காசு பணமெல்லாம் கரைஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது
கூழாங்கல்லு கண்ணால் இவன்
சுண்டி இழுப்பான்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன்
பேசி சிரிப்பான்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி
எங்க பாண்டி சிங்கம் தான்னே
மோதிப்பாரு ஒண்டிக்கொண்டி
பாசத்துல தங்கம் தாண்டி
பழகிப் பாரு இவன் சுறாவளி பேரன் தாண்டி
பொசுக்குன்ன கிடைக்காது
தேடுற பாத
உழைக்க மறந்தவன் தான்
பூமியில் ஏழை
கலகலப்பா இருக்கலாம்
கைகலப்ப மறக்கலாம்
துடிதுடிப்பா வாழ்ந்து பார்க்கலாம்
கடனா கிடைக்காது
கடந்து போன காலம்
இருன்னா இருக்காது
எந்த பொருள் நாளும்
பாட்டி சொன்னா கதைகள
மறந்துப்போன தலைமுறை
ஆணிவேர மறந்துட்டு வாழுது பாரு
எட்டி நின்னா எதுவும் உன்ன
எக்கி வந்து சேராது
வெட்டி நியாயம் பேசித் திரிஞ்சா
எதுவும் இங்கே மாறாது
கூழாங்கல்லு கண்ணால் இவன்
சுண்டி இழுப்பான்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன்
பேசி சிரிப்பான்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி