Konjum Kiliyaana Pennai

Konjum Kiliyaana Pennai Song Lyrics In English


கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கி விட்டு
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா தப்பா
பஞ்ச பூதச் சாட்சியெல்லாம்
நெஞ்சமில்லாச் சாட்சி என்று
தொட்டு மாலை சூட்டுவது
சரியா தப்பா
சரியா தப்பாசரியா தப்பா

தின்னப்பழம் தந்துவிட்டு
தின்னாதே என்று கையை
தட்டிவிட்டுத் திட்டுவது
சரியா தப்பா
தீந்தமிழ்ப் பாட்டைப் பாடி
கேட்காதே என்று
காதைப் பொத்திவிட்டு கத்துவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமானால்
கண்ணைப் படைத்த கடவுள் செய்கை
சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம் எனது
நண்பன் செய்த குற்றமானால்
கற்பைப் படைத்த மனிதன் செய்கை
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

காதல் பிச்சை வேண்டிக் கையை
ஏந்தி வாசல் காத்து நின்றால்
சாத்திரங்கள் பேசுவது
சரியா தப்பா


அன்பு கொண்ட உள்ளத்தோடு
கள்ளமில்லா கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

மண்ணும் பொன்னும் மாயை என்று
மக்களுக்கு சொல்லிவிட்டு
பெண்ணைப் பார்த்து கண்ணடித்தால்
சரியா தப்பா
விண்ணுலக ஆசையின்றி
விரும்பும் பெண்ணை நேசத்தோடு
கண்ணியமாய் காதலித்தால்
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

மற்றொருவன் வாழ்வுக்காக
மனமறிந்த பெண்ணைவிட்டு
மனமுடைந்து சுற்றுவது
சரியா தப்பா
மறுமலர்ச்சி வேண்டும் வாழ்வில்
மறக்கமாட்டேன் உன்னை என்று
மலர் கரத்தை பற்றுவது
சரியா தப்பா
சரியா தப்பாசரியா தப்பா
சரியா தப்பாசரியா தப்பா