Konjum Malar Manjam

Konjum Malar Manjam Song Lyrics In English


கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே

பொன் மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழுஸ்வரம்

நான் ஆட எந்தன் மணிசதங்கை ஆடும் நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை நூலாக எந்தன் இடை மெலிந்து போகும் இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா வானூறும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்

ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும் நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மோதும் தழுவிடும் நழுவிடும் அது தரும் புதுசுகம்

வான் நிலவொளி பரவிடும் பால் மழை அதில் பொழிந்திடும் பார் இனிமைகள் துளிர் விடும் வாய் இளமைகள் பறந்திடும்

நான் பார்த்து பாய் போடவா அந்த நாள் தேடி நான் வாடவா

பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம் இங்கு வாராயோ நீ என் உயிரே


எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும் அதை தாராயோ நான் இன்புறவே

நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன் ஆஆஆ

தீயாக உடல் கொதிப்பெழுந்து மோகும் நான் உனை தழுவிடும் நாள் வரை பொறுத்திடு போராடும் இளம் உடல் இரண்டும் கூடும் வேர்வையின் போர்வையில் வேள்விகள் புகுந்திடும்

பால் அருவியில் குளித்திட நான் தினமும் உனை அழைத்திட நீ தனிமையில் அணைத்திட நான் ஒரு கணம் சிலிர்த்திட

தேனூற்று நீராட்டுது நம்மை பூங்காற்று தாலாட்டுது

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே

அதை தாராயோ நான் இன்புறவே இருவர் : அதை தாராயோ நான் இன்புறவே கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்