Koodi Vantha Megam |
---|
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா
ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா
பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா
ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா
பாதத்தில் முள்ளு தச்சா அழுவது கண்தானே
ஆணுக்கு வெறிப் பிடிச்சா அழிவது பெண்தானே
பாவம் சந்தன மரம் அடுப்பெறிக்க சொன்னானே
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி
நாணம் என்னும் வேலி என்னானது
கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது
நாணம் என்னும் வேலி என்னானது
கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது
அகலிகை சாபமிங்கே என்னைக்கும் தீராதோ
வரம் தரும் ராமனுமே கல்லா போனானோ
பூவில் வண்டு விழுந்தால்
தென்றலும் வந்து தீண்டாதோ
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி