Koodiyil Oruvan |
---|
இறைவாஇறைவாஇறைவா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா
கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு
கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு
தன் நலம் கருதா தனி விளக்கு
நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு
இறைவாஇறைவாஇறைவா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா
ஜாதி சமயங்கள் ஒன்றென்பார்
ஒரு சகோதர்கள் நாமென்பான்
ஆதி புத்தனின் வழி நின்றான்
அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான்
நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு
நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு
கல்லினும் கொடிய மனமுண்டு
இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா