Koondai Vittu |
|---|
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்
கூண்டை விட்டு
வெளியில் வந்து
நான் வளர்க்கும் பூச்செடியில்
முட்கள் மட்டும் பூப்பதென்ன
பாவமா சாபமா காலத்தின் கோலமா
கால் நடக்கும் பாதை எல்லாம்
கற்கள் குத்தி வலிப்பதென்ன
யார் இதன் காரணம்
தெய்வம்தான் கூறணும்
வைரக் கல்லை
நான் கொடுத்தால்
வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக் கல்லை எனக்களித்து
ஒப்புக் கொள்ளச் சொல்லுமே
நெய்யை விட்டு
தீபம் ஏற்றினால்
கையைச் சுட்டு நன்றி
காட்டுதே ஓ
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
தெய்வத்துக்கு ஆறு முகம்
மானிடர்க்கு நூறு முகம்
மெய் எது பொய் எது
யார் அதைக் கண்டது
பாலும் இங்கு வெள்ளை நிறம்
கள்ளும் இங்கு வெள்ளை நிறம்
பால் எது கள் எது
பேதம் யார் கண்டது
நேசம் வைத்த யாருக்குமே
நெஞ்சம் எல்லாம் காயம் தான்
பாசம் வைத்த கண்களிலே
பார்ப்பதெல்லாம் மாயம்தான்
ஏறிச் சென்ற
கால்கள் உதைக்குது
ஏற்றி விட்ட ஏணி சிரிக்குது ஓ
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்
கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
