Koonthalukku

Koonthalukku Song Lyrics In English


கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா

கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா

குளிர்ந்த நீரில் குளித்தாலும்
குணமும் கூடக் குளிப்பதில்லை
கும்பிடும் தெய்வம் முன்னிருந்தாலும்
இதயம் எதையும் மறப்பதில்லை

ஆடையினால் உடல் மறைத்தாலும்
ஆசைகள் மறைவதில்லை
அறுபது வயதை இருபது வயதில்
யாருமே அடைவதில்லை
யாருமே அடைவதில்லை

கூந்தலுக்கு மலர் கொடுத்தாள்
குளிர் முகத்தில் திலகமிட்டாள்
கொடுத்த மலர் வாடுமுன்னே
கொண்ட மலர் வாடுதையா


கண்களிருந்தும் காட்சியில்லாமல்
கலங்கி வாடும் உயிரிங்கே
பொருள் கையிலிருந்தும் பசியறியாமல்
கதறியழும் உயிர் அங்கே

சொந்தமிருந்து துணை சேராமல்
துடிதுடிக்கும் உயிர் இங்கே
துணையாய் இருக்க வழி இருந்தும்
துவளுதே உயிர் அங்கே
துவளுதே உயிர் அங்கே

பட்ட மரமே
பழுதடைந்த ஓவியமே
கட்டியதோர் தாலியின்றி
காரிகைக்குத் தந்ததென்ன

அணைக்காத கரங்களுக்குத் துணை எதற்கு
அருந்தாத முடவனுக்குப் பால் எதற்கு
சுவைக்காக மரக்கிளைக்கு வாய் எதற்கு
சுகம் தெரியாக் குருடனுக்கு வாழ்வெதற்கு