Koovatha Inbakkuyil Koovum |
---|
பாடலாசிரியர் : எ மருதகாசி
கூவாத இன்பக்குயில் கூவும் கூவாத இன்பக்குயில் கூவும் என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
ஆவியே ஆரமுதே சிங்காரியே அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும் ஆஆஆஆஅஆஅஆ
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும் அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும் அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும்
கூவாத இன்பக்குயில் கூவும்
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
ஜாதி மல்லிக் கொடியே தருமீது தாவித் தழுவித் துயிலும் ஜாதி மல்லிக் கொடியே தருமீது தாவித் தழுவித் துயிலும்
காதல் கீதம் பாடி வண்டு உலவும் போதை மீறி பூவை நாடிக் குலவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும் என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்