Kudumbam Oru Kadhambam |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் பெரும் லீலை
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் பெரும் லீலை
மனையாள் பணி செய்தால் மணவாளன் வாழலாம் அதிலே வருமானம் ஆனாலும் அவமானம் வீடுகள் தோறும் இங்கு இதுதானே கேள்வி இன்று
விடிந்தால் ஒரு எண்ணம் எல்லோர்க்கும் தனியுள்ளம்
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம்
கணவன் பெரிதென்று மணந்தார்கள் மங்கையர்கள் உழைப்பாள் அவளென்று மணந்தார்கள் நாயகர்கள்
பொருளாதாரத்திலே பொருள்தானா தாரம் இன்று பொருளாதாரத்திலே பொருள்தானா தாரம் இன்று இருவர் உழைத்தால்தான் இந்நாளிலே பசி தீரும்
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம்
இரண்டு குதிரையிலே ஒரு மனிதன் போவதென்ன இரண்டு நினைவுகளில் சில மனிதர் வாழ்வதென்ன
காலங்கள்தோறும் அவர் சிந்தனையில் மாற்றமென்ன மனிதன் நினைக்கின்றான் இறைவன் அதை மாற்றுகின்றான்
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் பெரும் லீலை
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம்