Kundrakudi Konda Vela |
---|
குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா
குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா
தங்கை இளநங்கை குலமங்கை
அவள் செங்கை
மண மாலைக் கொண்ட நாதர் வாழ
மஞ்சள் கொண்டு வஞ்சி வாழ
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே
குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
படியேறிடும் அடியார் துயர் பொடியாகிட
வடிவேல் தனை கரம் ஏந்திய பெருமான் உனை
தொழுதால் வந்து அழுதால் காலில் விழுந்தால்
உற்ற பழி பாவமும் பல தோஷமும்
அறியாமையும் அபச்சாரமும்
கதிர் தேடிய பனிப் போலவே விலகும்
இன்பம் விளையும் துன்பம் வடியும்
சர்ப்ப காவடி நாற்கொடை ஆட சிந்து பாட
உந்தன் சன்னதி வாசலை நாட
அருள் கூட இருள் ஓட
நிதம் நிதம் தொழும் மனம்
நினைத்திடும் வரம் தரும் குமரா எங்கள் அமரா
மறை முதல்வா அரும்புதல்வா
பதமாடிடும் வடிவங்களில்
உயர்வாகிடும் மயில் மீதினில்
நடமாடிடும் குமரேசனும் நீயன்றோ
தந்தை தாயன்றோ அடிமை நானன்றோ
உன்னை ஒருபோதிலும் மறவாதவள்
முருகா எனும் வரும் வேளையில்
விஷ நாகமும் விலகாமலே தீண்டுமோ
சாபம் தீருமோ என்ன நேருமோ
இந்த வேளையில் நீ வந்து காக்க
இசை கேட்க கையில்
வேல் கொண்டு வா எந்தன் எல்லை
யாருமில்லை உந்தன் பிள்ளை
உனைவிட துணையெது உனக்கொரு இணையெது
குகனே சக்தி மகனே ஆறுமுகனே குருபரனே
ஆதரிக்க நீயிருக்க சோதரிக்கு துன்பமென்ன
முருகா முருகா முருகா
அம்மையென்றும் அப்பனென்றும்
உன்னையன்றி யாருமில்லை
குமரா குமரா குமரா
பெண் முகத்தின் குங்குமத்தை
கனிவு கொண்டு காக்க வேண்டும்
வருவாய் வருவாய் வருவாய்
கந்தவேளை எண்ணி எண்ணி
வந்தவேளை காவல் நிற்கும்
வடிவேல் வடிவேல் வடிவேல்