Kunguma Kolangal

Kunguma Kolangal Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஅஹாஆஆஅஆ
ஹாஹாஹாஆஅஹாஆஆஅஆ

குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி

குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தர வேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்கு தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி


குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி
நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி

குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி