Kunguma Kolangal |
---|
ஹாஆஅஆஅஆஅஹாஆஆஅஆ
ஹாஹாஹாஆஅஹாஆஆஅஆ
குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி
குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தர வேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்கு தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி
குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி
நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி
குங்குமக் கோலங்கள்
கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி