Kungummathai

Kungummathai Song Lyrics In English


குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா

குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா

நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
எதை எண்ணி குங்குமம் வைப்பேன்
நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன்

குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா

பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
நான் பாவமென்று மணமுடித்தீரோ
அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ
ஹோ ஹோ ஓ


குங்குமத்தை அழிக்கவா

நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
இது படைத்தவனின் குற்றமல்லவா
அந்தப் பாவி செய்த பாவமல்லவா
ஆஆஆஅஆஅ

குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா