Kungummathai |
---|
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
எதை எண்ணி குங்குமம் வைப்பேன்
நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன்
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
நான் பாவமென்று மணமுடித்தீரோ
அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ
ஹோ ஹோ ஓ
குங்குமத்தை அழிக்கவா
நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
இது படைத்தவனின் குற்றமல்லவா
அந்தப் பாவி செய்த பாவமல்லவா
ஆஆஆஅஆஅ
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா