Kurunthogai

Kurunthogai Song Lyrics In English


குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்

ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்

நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா

குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

 ஆஅசதி மோகம் என்னும் மேகம்
இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே

இது அவ்வையாரின் கேள்வி
என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும்போது
அழகாய் வைக்கிறாய்

இல்லறம் கொள்ள வினைத்தொகையும்
அளபெடையும் உதவாது
சத்தியமடி தமிழ் நமக்கு
உணவளிக்கும் தடை ஏது
ஹேய் பொய்யோ
நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்


குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

ஹேய்ஹே
உன் மூளை கொண்டு பார்த்தால்
அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும்போது
நேசம் தோன்றுமே

விழி மூடி கொண்டு காண
என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண
மூளை வேணுமே

கணித மேதை ராமானுஜம்
பெத்த பொண்ணு நீ தானா
கற்பனை பண்ணும் மகாகவி
கம்பன் மகன் நீ தானா
அம்மே தமிழில் எம்எ
நம்பி வா வா

குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்