Kuthala Kaattukku |
---|
குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே
இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமேஏ
கள்ளழகர் கோயில் உள்ள
உன்னாட்டமா சிற்பம் இல்ல
எட்டி நின்னு என்னக் கொல்லாதே
வெட்கமுன்னு பொய்யச் சொல்லாதே
என்ன வச்சு பாட்டுக் கட்டு
கையில் வரும் நோட்டுக் கட்டு
நோட்டு வந்த வந்த கையோட
வாங்கிக் கொடு பட்டுப் பாவாட
எதிருல இருக்குது பணியாரம்
எடுத்துத்தா எனக்குள்ள பசி போகும்
இதுக்கெல்லாம் அவசர படலாமா
இருக்குது கொடுக்கிறேன் பொறு மாமா
இது என்ன கூத்து பேச்ச மாத்து
இனி தாங்காதம்மா மானே
ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமேஏ
ஒண்ணாகத்தான் நீயும் நானும்
போனால் என்ன கும்பகோணம்
இப்போ அங்கே மகாமகம்தான்
காணக்காண ரொம்ப சொகம்தான்
அம்மாடியோ வேணா வேணா
பட்டதெல்லாம் போதும் போதும்
போனவங்க என்ன ஆனாங்க
சொர்க்கத்தையே தேடிப் போனாங்க
உன்னை விட்டு பிரிஞ்சிட முடியாது
எனக்கொரு தனி சுகம் கிடையாது
நமக்குனு இருக்குது வயக்காடு
ஒழைக்கலாம் நமக்கென்ன குறைபாடு
கிடைக்குமா மாமா வயலும் வாழ்வும்
அது போல யோகம் ஏது
ஏய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமேஏ
இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆ மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே