Kutti Kutti Pani Thuliye |
---|
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
குட்டி குட்டி
பனித்துளியே குளு குளு
பனி துளியே முத்து முத்து
பனி துளியே முத்தம் இடும்
பனி துளியே
நீ எங்கிருந்து
பிறந்தாய் நீ எங்க வந்து
நிறைந்தாய் அந்த சூரியனை
பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்
குட்டி குட்டி
பனித்துளியே குளு
குளு பனி துளியே
முத்து முத்து பனி
துளியே முத்தம்
இடும் பனி துளியே
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
கால்கள் இன்றியே
நதி நடந்து போகையில்
கொலுசு சத்தம்
கேட்பதெப்படி
கைகள் இன்றியே
காற்று கழுவும் வேளையில்
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி
நெடுஞ்சாலையில்
நிற்கும் மரங்களே நீங்கள்
நடக்க சொல்வதெப்படி
உங்கள் முகங்கள் எங்க
உள்ளது ஆஹா
மரங்கள் என்பதென்ன
மண்ணுக்கு அதுவொரு குடை
விண்ணுக்கு அதுவொரு குடை
உனக்கும் எனக்கும் விசிறிதான்
குட்டி குட்டி
பறவைகளே குறு குறு
பறவைகளே சுட்டி சுட்டி
பறவைகளே
குட்டி குட்டி
பறவைகளே சத்தம்
இடும் பறவைகளே
வானம் நூலாகும்
மேகம் எல்லாம் புத்தகம்
யார் படித்து களைத்து
போட்டதோ
எங்கே திருவிழா
குடும்பத்தோட பறவைகள்
திருவிழாவும் பார்க்க
போகுதோ
ஏ கிளியே உன்
உதட்டிலே தினம் உதட்டு
சாயம் பூசினாய் அது எந்த
கடையில் வாங்கினாய்
சொல்வாய்
அஞ்சுமணி அஞ்சுமணி
எழுப்பிட யாருமில்லை மொட்டு
விட்டு மலர்க்கொடி கண்
விழிப்பதெப்படி
குட்டி குட்டி மரம்
செடியே ( செடியே செடியே )
குளு குளு நதி அலையே
யே யே யே
புத்தம் புது புல்
வெளியே ( ஓஹோ ஓ ஓ )
புல் உறங்கும் பனி துளியே
யே யே யே
அட உங்களுக்குள்
யாரும் அழகி போட்டி
வைத்தால் உங்கள்
அனைவரையும் அழகி
என்று தேர்ந்தெடுப்பேன்