Kuyile Ilamanguyilae |
---|
ஆஅஆஅஆஅஆஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஹாஆஅஆஅஆஅ
தினம் தோறும் அம்மாவை
நீராட்டுவேன்
தலை வாரி அழகாகப்
பூச் சூட்டுவேன்
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்
முன்னூறு நாள்
மடி தாங்கினாள்
அந்தத் தாய் தானே
நான் போற்றும் கடவுள் வடிவம்
பல கோயிலோ பல தெய்வமோ
இங்கு வேறேது நான் காண
உலகம் முழுதும்
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத் தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது
குயிலே இள மாங்குயிலே