Maadapurakkalum |
---|
மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்
இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளேஹோய்ஹோய்
கள்ளூறும் தென்னைகளே
மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான்
வயது வந்தாலே கொண்டாட்டம்தான்
உடலெங்கும் அலை மோதும்
புது நீரோட்டம்தான்
வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான்
வயது வந்தாலே கொண்டாட்டம்தான்
உடலெங்கும் அலை மோதும்
புது நீரோட்டம்தான்
விழி எழுதிட மனம் படித்திடும்
பல கவிதைகளே
துணை அழைத்திட குரல் கொடுத்திடும்
இளம் பறவைகளே
கடல் கூடும் நதி போல
எனைச் சேருங்களேன்
கல்லூரி கிள்ளைகளேஹான்ஆ
கள்ளூறும் தென்னைகளே
மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்
இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளேஹேய்ஹேய்
கள்ளூறும் தென்னைகளேஏ
சாரி நோ என்று பெண் சொல்வது
ஒகே எஸ் என்று பொருளாவது
பல வார்த்தை பொருள் மாறும்
பெண் அகராதியில்
சாரி நோ என்று பெண் சொல்வது
ஒகே எஸ் என்று பொருளாவது
பல வார்த்தை பொருள் மாறும்
பெண் அகராதியில்
முகம் சிவப்பதும் நகம் கடிப்பதும்
இளம் பருவமடி
தொட நினைக்கையில் இடம் கொடுத்திட
மனம் உருகுமடி
ஒரு ஏக்கம் உனை தாக்கும்
அது புரியாததோ
கல்லூரி கிள்ளைகளேஹோய்ஹோய்ஹோய்
கள்ளூறும் தென்னைகளே
மாடப்புறாக்களும்
மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே
சுகம்தான் சுவைதான்
முத்துச் சரங்களும்
முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே
இதம்தான் பதம்தான்
இது பாடல் இது ராகம்
இது தாளம் இது பாவம்
கல்லூரி கிள்ளைகளேஹான்ஆ
கள்ளூறும் தென்னைகளே
கல்லூரி கிள்ளைகளேஹோய்ஹோய்
கள்ளூறும் தென்னைகளேஏ